என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிதம்பரம் அருகே சிறுமிக்கு திருமணம்- 3 பேர் மீது போக்சோவில் வழக்கு
Byமாலை மலர்5 May 2022 12:06 PM GMT (Updated: 5 May 2022 12:06 PM GMT)
சிதம்பரம் அருகே சிறுமிக்கு திருமணம் நடந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள கருவேப்பம்பட்டி வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 60). இவரது மகள் கவிதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கர்ப்பிணியாக இருந்த கவிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு கீர்த்தனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கருகலைந்தது. கவிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் அவருக்கு வயது குறைவாக இருப்பதை கண்டறிந்து தெரிவித்தார்.
இதையடுத்து கவிதாவின் உறவினர் பிரியா என்பவர் புதுசத்திரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் குழந்தை திருமணதடுப்பு சட்டம் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளில் தணிகாசலம், அவரது மனைவி செல்வி, கவிதாவை திருமணம் செய்த ஜெயராமன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X