search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டை சந்தித்து வாழ்த்து பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்.
    X
    தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டை சந்தித்து வாழ்த்து பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்.

    போலீஸ் சூப்பிரண்டிடம் வாழ்த்து பெற்ற சார்பு ஆய்வாளர்கள்

    தேவகோட்டையில் போலீஸ் சூப்பிரண்டிடம் புதிதாக பொறுப்வாபேற்ற சார்பு ஆய்வாளர்கள் வாழ்த்து பெற்றனர்.
    தேவகோட்டை 

    சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தலைமை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

    தமிழக காவல் துறையில் 1997 முதல் பேட்ச் தலைமை காவலராக பணியாற்றிய சுமார் 5000-க்கும் மேற்பட்ட வர்களுக்கு தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளராக அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தலைமை காவலராக பணியாற்றிய காவலர்களும் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். அவ்வாறு பதவி உயர்வு பெற்ற தலைமை காவ லர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் சீருடை அணிந்து அந்தந்த உட் கோட்டத்தில் உள்ள துணை கண்காணிப்பா ளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அதன்படி தேவகோட்டை கோட்டத்தில் 7 ஆண்கள், 3 பெண்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    Next Story
    ×