search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகள்
    X
    மாணவிகள்

    கடலூர் மாவட்டத்தில் 30,978 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

    பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மே 10ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர்.
    கடலூர்:

    கொரோனா தொற்று தாக்கத்தால் இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    இதன்படி, நாளை (5ந் தேதி) முதல் தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள் தொடங்குகிறது. இந்தத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 244 பள்ளிகளிலிருந்து 15,136 மாணவர்கள், 15,842 மாணவிகள் என மொத்தம் 30,978 பேர் எழுதுகின்றனர்.

    பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மே 10ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர்.

    மே 6ஆம் தேதி தொடங்கும்10ம் வகுப்பு பொதுத் தேர்வை 445 பள்ளிகளைச் சேர்ந்த 18,489 மாணவர்கள், 17,096 மாணவிகள் என மொத்தம் 35,585 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வு மே 23ந் தேதியும், பிளஸ் 1 தேர்வு மே 31ந் தேதியும்,10 ம் வகுப்பு தேர்வுகள் மே 30ஆம் தேதியும் நிறைவடைகின்றன. மேல்நிலைத் தேர்வுக்காக கடலூர் மாவட்டத்தில் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில், கல்வி மாவட்டங்கள் வாரியாக விருத்தாசலம் 31, கடலூர் 36, சிதம்பரம் 23, வடலூர் 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 152 தேர்வு மையங்கள் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தலா 7 தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.பூபதி தகவல் தெரிவித்தார்.
    Next Story
    ×