என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.
    X
    கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.

    கருத்தரங்கு

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் “நிதிசந்தையில் தொழில் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்வு நடந்தது. 

    இந்தியாவின் தலைசிறந்த நிதி சந்தை ஆய்வாளர் மற்றும் மும்பை ஐ.டி.பி.ஐ. கேபிடல் மார்க்கெட் மற்றும் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சண்முக நடராஜன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், உற்பத்தி துறையில் இந்தியா தனது போட்டி நாடான சீனாவின் உற்பத்தி திறனில் 10-ல் ஒரு பங்கே கொண்டுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய இந்த கால கட்டத்தில், ரஷியா-உக்ரைன் போர் சூழலில் மேற்கத்திய நாடுகள் தங்கள் வர்த்தக தேவைகளுக்கு இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளையே விரும்புகின்றன.  இது நமக்கு பல வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

    வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒழுங்க மைக்கப்பட்ட துறையில் மாதம் தோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாவதை மேற்கோள் காட்டிய அவர், இதன்மூலம் தென் மாநிலங்களான தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகியவை அதிக பயன்பெறும்.

    எனவே மாணவர்கள் வேலைவாய்ப்பை பற்றி கவலை கொள்ளாமல் தங்களை தகுதி படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார். 

    “கிரேட் பைனான்சியல் சர்வீசஸ்” தலைமை நிர்வாக அதிகாரி ஞானசக்திவேல் பேசுகையில், வாடிக்கையாளரிடம் நம் பொருளையோ சேவை யையோ திணிக்கக்கூடாது. வாடிக்கையாளரின் தேவை அறிந்து சேவை செய்வதின் அவசியத்தை எடுத்துரைத்தார். காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் வளர்மதி நன்றி கூறினார்.
    Next Story
    ×