என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆதம்பாக்கத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் சாரங்கபாணி (வயது75). வந்தவாசியை சேர்ந்த இவர் வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை சரி இல்லாததாலும் மகன் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக சாரங்க பாணிக்கும், அவருடைய மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் வீட்டின் மாடிப்படிக்கட்டின் கீழ் உள்ள கழிவுநீர் குழாயில் சாரங்கபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன், ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாரங்கபாணி, தன்னுடைய மகன் துன்புறுத்துவதாக ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாரங்கபாணி தற்கொலை செய்து உள்ளார்.
இது தொடர்பாக அவரது மகனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்