என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிபோதையில், தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த தொழிலாளி பலி
Byமாலை மலர்4 May 2022 6:23 AM GMT (Updated: 4 May 2022 6:23 AM GMT)
சேலம் வீராணம் அருகே குடிபோதையில், தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள டி.பெருமாபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவருக்கு கலைச்செல்வி (45) என்ற மனைவி உள்ளார்.
முருகேசன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30 ந் தேதி சேலம் பள்ளப்பட்டி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த முருகேசன், தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த முருகேசனை அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X