என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசி பறிமுதல்- லாரியுடன் டிரைவர் கைது
களியக்காவிளை:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையில் போலீசார் களியக்காவிளை அருகே குழித்துறை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியில் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் டிரைவரை விசாரணை செய்தபோது அவர் பெரும் சிலம்பு வேளிமலை பகுதியை தினேஷ் குமார் (வயது 25) என்று தெரியவந்தது.
மேலும் லாரியை சோதனை செய்து பார்த்த போது சுமார் 8 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து கடத்தல் வாகனம், அரிசி உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கபட்டது. அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்