search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி இறந்த குடும்பத்துக்கு ஈம சடங்கு உதவி தொகைக்கான காசோலையினை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்
    X
    மாற்றுத்திறனாளி இறந்த குடும்பத்துக்கு ஈம சடங்கு உதவி தொகைக்கான காசோலையினை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி

    குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 478 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தாட்கோ மூலம் அரசு, அரசு சாரா அமைப்புகளில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தூய்மை பணிபுரிவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 2,12,000 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினையும் மற்றும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 4 மாற்றுத்திறனாளிகள் இறந்தமைக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.68,000 க்கான காசோலை வழங்கப்பட்டது.

    சிதம்பரம் வட்டம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பார்வதி என்பரின் மகள் சத்தியப்பிரியா நீரில் மூழ்கி இறந்தமைக்காக அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1,00,000 க்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜீத்சிங், கற்பகம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×