என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகங்கை நகரசபை தலைவர் ஆனந்தனிடம் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கோரிக்கை மனுவை வழங்கி பேசிக் கொண்டிருந்த
ப.சிதம்பரம் வாழ்த்து
சிவகங்கை நகர்மன்ற தலைவருக்கு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை தி.மு.க. நகரசெயலாளர் ஆனந்தன் காங்கிரஸ் கூட்டணியுடன் நகர்மன்ற தலைவராக பதவியற்றார். அவரை வரவேற்று வாழ்த்து தெரிவிக்க நேற்று முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் வருகை தந்தார்.
வருகைதந்த ப.சிதம்பரத்துக்கு, நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் கவுன்சிலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில் சிவகங்கை கோகுலேகால் தெருவில் அமைந்துள்ள டிரஸ்ட்டுக்கு சொந்தமான மிகவும் பழமையான நூலகத்தை புதுப்பிக்க நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த நூலகம் தென்பகுதி மக்களுக்காக முதன்முதலில் உருவாக்கப்பட்டது. மகாத்மா காந்தி இந்த நூலகத்துக்கு வந்து தங்கி படித்து உள்ளார் என்ற வரலாறு உள்ளது. இதை கவனத்தில் கொண்டு இந்த நூலகம் கட்டிடத்தை புதுப்பிக்க நகராட்சி தலைவர், ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் ப.சிதம்பரம் கோரிக்கை மனுவை அளித்தார்.
இந்த நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், கார்த்திகேயன், சரவணன், ராமதாஸ், மகேஷ், சீமான் விஜயக்குமார், சண்முகராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






