என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோடை வெயிலை சமாளிக்க கவர்னர் தமிழிசை ஆலோசனை
Byமாலை மலர்2 May 2022 7:10 AM GMT (Updated: 2 May 2022 7:10 AM GMT)
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆலோசனைகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
நாளை மறுநாள் (4ந்தேதி) கத்திரி வெயில் தொடங்க உள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த கோடை வெயிலினால் உடலில் என்னென்ன அறிகுறி ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆலோசனைகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உடல் உஷ்ணத்திற்கான அறிகுறிகளாக அளவுக்கு அதிகமான வியர்வை ஏற்படும். நாக்கு மற்றும் தோல் வறட்சி ஏற்படும்.
மனக்குழப்பம், பேச்சு குளறுதல், தலை சுற்றல், மயக்கம், வலிப்பு நோய், நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கும் செல்லலாம்.
இதை தடுக்க மெல்லிய பருத்தி ஆடை மற்றும் கதர் ஆடைகளை அணியலாம்.
குறைந்தபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
இணை நோய் இருப்பவர்கள், முதியவர்கள், குழந்தைகள் வெயிலில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
நாளை மறுநாள் (4ந்தேதி) கத்திரி வெயில் தொடங்க உள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த கோடை வெயிலினால் உடலில் என்னென்ன அறிகுறி ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆலோசனைகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உடல் உஷ்ணத்திற்கான அறிகுறிகளாக அளவுக்கு அதிகமான வியர்வை ஏற்படும். நாக்கு மற்றும் தோல் வறட்சி ஏற்படும்.
மனக்குழப்பம், பேச்சு குளறுதல், தலை சுற்றல், மயக்கம், வலிப்பு நோய், நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கும் செல்லலாம்.
இதை தடுக்க மெல்லிய பருத்தி ஆடை மற்றும் கதர் ஆடைகளை அணியலாம்.
குறைந்தபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
இணை நோய் இருப்பவர்கள், முதியவர்கள், குழந்தைகள் வெயிலில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... புதிய மாநில நிர்வாகிகள் தேர்வில் பா.ஜனதா தீவிரம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X