என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    விருத்தாசலம் அருகே தீ விபத்து- 3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

    விருத்தாசலம் அருகே 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னியன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர், ராயப்பன், ஜான் பால். இவர்கள் 3 பேரும் தனித்தனி கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    நேற்று இரவு அவர்கள் அப்பகுதியில் உள்ள மாதா கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது ஜான் பால் என்பவர் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி சேகர் மற்றும் ராயப்பன் வீடுகளுக்கும் தீ பற்றி எரிந்தது. இதை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்து தீயணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் 3 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகியது. வீடுகள் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.

    இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×