என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்கராபுரம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது

    சங்கராபுரம் அருகே சிறுமியை கடத்திய வாலிபரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே பாசார் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் சின்னகவுண்டன் (வயது28). இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்றார்.

    இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகவுண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
    Next Story
    ×