என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமசபை கூட்டம் நடந்தது.
    X
    கிராமசபை கூட்டம் நடந்தது.

    கருப்பம்புலத்தில் கிராமசபை கூட்டம்

    கருப்பம்புலத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் அனுப்பிய வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராம் தலைமை வகித்தார். 

    கூட்டத்தில் தமிழக முதல்வர் அனுப்பி வாழ்த்து வாசிக்கப்பட்டது.
    அதில் 75-ம் ஆண்டை அமுத பெருவிழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் 9 இனங்களான வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நிலையம், குடிநீர் வசதி, சமூக பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள், பசுமையும் தூய்மையும் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை ஊராட்சி அடைய வேண்டுகிறேன் என தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    பின்பு பசுமை கிராமம் தூய்மை கிராமம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கிராம சபா கூட்டத்தில் நாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×