search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரத்ததானம் வழங்கிய கல்லூரி மாணவர்கள்

    ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நித்யா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் தொடங்கி வைத்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ரத்த தானம் வழங்கினர்.

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி பொறுப்பாளர் வசந்தகுமார், பெருமாநல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நித்யா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். மொத்தம் 114 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
    Next Story
    ×