என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போடி அருகே ஊராட்சி அலுவலகத்திற்கு மோடி படத்துடன் வந்த பா.ஜ.க.வினர் அலுவலகத்தை பூட்டிச் சென்றதால் பரபரப்பு
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது நரசிங்கபுரம் ஊராட்சி. இங்கு ஊராட்சி அலுவலக கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராசிங்காபுரம் நீர்த்தேக்க நிலை அருகில் தற்காலிக ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க.வினர் மனு அளித்திருந்தனர். ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியை வழங்குகிறது.
எனவே மோடியின் படம் வைக்க வேண்டும் எனக்கூறி மனு அளித்திருந்தனர். மேலும் மோடியின் உருவப்படத்துடன் ஊர்வலமாக பா.ஜ.க.வினர் சென்றனர். ஆனால் அதிகாரிகள் ஊராட்சி அலுவலகத்தை பூட்டிச் சென்றதாக தெரிகிறது.
காலை 11 மணி வரையிலும் அலுவலகம் திறக்கப்படாததால் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சஞ்சீவ் கணேசன் தலைமையில் கண்டன கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து அலுவலகம் அருகிலேயே பா.ஜ.க. கொடியேற்றி பிரதமரின் படத்தை வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்