என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். கூலித்தொழிலாளி. இவரது மகன் தனுஷ் (வயது 18). ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
பொதுத்தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் மாணவர் தனுஷ் நன்றாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த தனுஷ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனுஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






