என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெருந்துறையில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்- வாலிபர் கைது
Byமாலை மலர்22 April 2022 3:54 AM GMT (Updated: 22 April 2022 3:54 AM GMT)
பெருந்துறையில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று மாலை பெருந்துறை மணியம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பவானி ஜீவாநகரை சேர்ந்த அரவிந்தசாமி (வயது 31) என்பதும், அவர் பெருந்துறையில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்தசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று மாலை பெருந்துறை மணியம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பவானி ஜீவாநகரை சேர்ந்த அரவிந்தசாமி (வயது 31) என்பதும், அவர் பெருந்துறையில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்தசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X