search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பெருந்துறையில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்- வாலிபர் கைது

    பெருந்துறையில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று மாலை பெருந்துறை மணியம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பவானி ஜீவாநகரை சேர்ந்த அரவிந்தசாமி (வயது 31) என்பதும், அவர் பெருந்துறையில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்தசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×