என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தோழியை ஆபாச படமெடுத்து வாட்ஸ்அப்பில் பதிவேற்றிய வாலிபர்- போலீசுக்கு பயந்து தலைமறைவு
Byமாலை மலர்21 April 2022 10:36 AM GMT (Updated: 21 April 2022 10:36 AM GMT)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தோழியை ஆபாச படமெடுத்து வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் விக்கி (எ) சிவசந்திரன் (வயது23). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இது தவறான செயல் என்று சிறுமியின் தாயார் கண்டித்துள்ளார்.
இதனால் கோபம் கொண்ட விக்கி அந்த குடும்பத்தை பழி வாங்கும் நோக்கத்தில் தனது செல்போனில் அந்த சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைபடத்தை தயார் செய்து தன்னுடைய வாட்ஸ்அப்பில் பதிவு செய்து வைத்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியவர இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை இதுதொடர்பாக பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது பற்றி அறிந்த விக்கி போலீசின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் (பொறுப்பு) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் விக்கி (எ) சிவசந்திரன் (வயது23). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இது தவறான செயல் என்று சிறுமியின் தாயார் கண்டித்துள்ளார்.
இதனால் கோபம் கொண்ட விக்கி அந்த குடும்பத்தை பழி வாங்கும் நோக்கத்தில் தனது செல்போனில் அந்த சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைபடத்தை தயார் செய்து தன்னுடைய வாட்ஸ்அப்பில் பதிவு செய்து வைத்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியவர இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை இதுதொடர்பாக பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது பற்றி அறிந்த விக்கி போலீசின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் (பொறுப்பு) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X