search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்டெர்லைட்டை திறக்க வலியுறுத்தி மனு கொடுத்த பொதுமக்கள்.
    X
    ஸ்டெர்லைட்டை திறக்க வலியுறுத்தி மனு கொடுத்த பொதுமக்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கலெக்டரிடம் மனு

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    தூத்துக்குடி:
     
    தூத்துக்குடியை அடுத்த மடத்தூர், அய்யனடைப்பு, சோரீஸ்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். 

    அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது நாங்கள் பல்வேறு வகையில் வேலையை பெற்று வந்தோம்.

     ஆலை மூடப்பட்டதால் தற்போது எங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் வெளியூர் சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

     ஸ்டெர்லைட் ஆலையால் எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை வாய்ப்பை பெற்று வந்தோம். 

    தற்போது வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். 

    எனவே இந்த ஆலையை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×