என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே இரட்டைக்கொலை வழக்கில் தொழிலாளிக்கு இரட்டைஆயுள் தண்டனை- நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுக ராஜ் (வயது 45 )தொழிலாளி.
இவருக்கும், இவரது மனைவிக்கும் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செல்லையா மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய் ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த ஆறுமுகராஜ் அரிவாளால் செல்லையா மற்றும் பேச்சித் தாய் ஆகியோரை வெட்டிக் கொலை செய்தார்.
இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கில் நெல்லை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீபா தீர்ப்பு கூறினார்.
அப்போது இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறுமுக ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்