search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி படகு
    X
    மீன்பிடி படகு

    தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கொழும்பு:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    Next Story
    ×