என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விவசாய பயண்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி- கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்தல் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளான ஏரி மற்றும் குளங்களில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் வண்டல் மண் தேவைப்படுமாயின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்திட வேண்டும். இம்மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களால் செயல்முறை ஆணைகள் வழங்கப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான துறை ரீதியான வாகன எண் அனுமதியுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகள் வருவாய் கிராமம், புல எண், வாகன விபரங்கள் உள்ளிட்டவைகளை முறையாக அளித்து வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி பெற்று பயனடையளாம்.
இவ்வாறு அவர் கூயினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






