search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    தளி அருகே பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை

    டாஸ்மாக் கடை அருகே பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேன்கனிகோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த தேவகான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் போலசாரி. இவரது மகன் ராஜேஷ் (வயது 26 ).இவர் உளிவீரனப்பள்ளியில் உள்ள தனியார் பேட்டரி கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜேஷ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதக்கொண்டபள்ளி டாஸ்மாக் கடை பின்புறம் ராஜேஷ் அடித்து படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் சப்இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்த ராஜேசின் தலையில் பின்புறம் பலத்த ரத்தக்காயம் நெற்றியில் வாய்ப்பு காயங்களும் இருந்தன. மேலும் சற்று தூரத்தில் பாறை ஒன்றின் மீது உடைந்த பீர் பாட்டில் ரத்தக்கறை இருந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மது குடிக்கும் போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் ராஜேஷ், அடித்துக் படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ராஜேசை படுகொலை செய்தவர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் கடை அருகே பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×