என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    அ.ம.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    சொத்து வரியை கண்டித்து ஓசூரில் அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.சார்பில், தமிழகத்தில் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியதாக தி.மு.க. அரசை கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் நேற்று ஓசூரில்  அர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணாசிலையருகில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் எம்.மாரே கவுடு தலைமை தாங்கினார். நகர செயலாளர் வீரய்யா வரவேற்றார். 

    இதில், மாவட்ட அவைத்தலைவர் அன்வர்பாஷா, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளதுரை, மாவட்ட பொருளாளர் சிவகுமார் , லோகேசன், துரைராஜ், அரப்ஜான் உள்ளிட்ட கட்சியினர்  திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், சாய்கிரண் நன்றி கூறினார்.
    Next Story
    ×