என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் பலி
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (84) இவரது மனைவி தனலட்சுமி (70). கடந்த 7-ந் தேதி அதிகாலை தனலட்சுமி வெந்நீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார் .அப்போது கியாஸ் கசிந்து இருந்ததால் திடீரென சிலிண்டர் வெடித்தது.
இதில் தனலட்சுமி மீது தீப்பற்றியது அவரை காப்பாற்ற சென்ற பாலசுப்பிரமணி மீதும் தீ பரவியது. தீயில் கருகிய இருவரும்கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தனலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






