என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மழைக்கு குடைபிடித்த படி செல்லும் மக்கள்.
கோத்தகிரி, குன்னூரில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
கோத்தகிரி, கட்டபெட்டு, கொடநாடு, கீழ்தட்டபள்ளம், சோலூர் மட்டம் பகுதிகளில் இரவு 10 மணியளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் இதமான காலநிலையும் நிலவி வருகிறது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை கடுமையான வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானத்தில் மேகமூட்டங்கள் திரண்டு, மழை பெய்வது போல் இருந்தது. இரவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழை குன்னூர் பஸ் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் குன்னூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
கோத்தகிரி, கட்டபெட்டு, கொடநாடு, கீழ்தட்டபள்ளம், சோலூர் மட்டம் பகுதிகளில் இரவு 10 மணியளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. மேலும் தேயிலை செடிகளில் ஏற்பட்ட கொப்பள நோய்களும் சரியாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர் அடுத்த எருமாடு பகுதியிலும் மழை பெய்தது. சாரல் மழை பெய்ய தொடங்கி, சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
வால்பாறை பகுதியில் நேற்று லேசான மழை பெய்யும், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் மார்க்கெட்டிற்கு வந்தவர்கள், பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் அனைவரும் மழையில் நனைந்தனர். சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதேபோல் பொள்ளாச்சி பகுதியிலும் மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் இதமான காலநிலையும் நிலவி வருகிறது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை கடுமையான வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானத்தில் மேகமூட்டங்கள் திரண்டு, மழை பெய்வது போல் இருந்தது. இரவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழை குன்னூர் பஸ் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் குன்னூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
கோத்தகிரி, கட்டபெட்டு, கொடநாடு, கீழ்தட்டபள்ளம், சோலூர் மட்டம் பகுதிகளில் இரவு 10 மணியளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. மேலும் தேயிலை செடிகளில் ஏற்பட்ட கொப்பள நோய்களும் சரியாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர் அடுத்த எருமாடு பகுதியிலும் மழை பெய்தது. சாரல் மழை பெய்ய தொடங்கி, சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
வால்பாறை பகுதியில் நேற்று லேசான மழை பெய்யும், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் மார்க்கெட்டிற்கு வந்தவர்கள், பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் அனைவரும் மழையில் நனைந்தனர். சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதேபோல் பொள்ளாச்சி பகுதியிலும் மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






