என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கடலூரில் போலீசார் அதிரடி- பிரபல ரவுடி கும்பல் தலைவன் சிக்கினான்

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ரவுடி மகாராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
    கடலூர்:

    கடலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கெடிலம் ஆற்றின் கரையோரம் ஒருவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சென்னை ரெட்ஹில்சை சேர்ந்த மஜா என்கின்ற மகாராஜன் (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் ரவுடி கோஷ்டி தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த கோஷ்டிக்கு எதிராக மற்றொரு கோஷ்டியாக மதி தரப்பினர் செயல்பட்டு வந்துள்ளனர்.

    இரு தரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்தது. எனவே முன்விரோதம் காரணமாக தற்போது மகாராஜன் தலைமறைவாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ரவுடி மகாராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதுதொடர்பாக அந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசாரிடம் கடலூர் மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×