என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் அருகே வடமாநில வாலிபர் அடித்துக்கொலை
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே 63 வேலம்பாளையம்- சின்ன காளிபாளையம் இடையே உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார்?, அவரை கொலை செய்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. கொலையாளிகள் யாரென்று கண்டறிய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்றிரவு ஒரு காரில் வாலிபர் ஒருவரை கடத்தி வந்து காட்டுப் பகுதியில் வீசி சென்றதாக பொதுமக்கள் சிலர் கூறினர்.
எனவே அந்த கும்பல்தான் வாலிபரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு பல்லடம் டி.எஸ்.பி., வெற்றி செல்வன், மங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர். வடமாநில வாலிபரை கொன்று காட்டுப்பகுதியில் உடலை வீசிச்சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்