என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாணவிக்கு பாலியல் தொந்தரவு- கலெக்டர் அலுவலக ஊழியர் கைது
Byமாலை மலர்6 April 2022 5:42 AM GMT (Updated: 6 April 2022 5:42 AM GMT)
பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரமேசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மருத்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30) திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் 9-ம்வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரமேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
மேலும் அவர் இதுபோல் வேறு சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அடுத்த மருத்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30) திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் 9-ம்வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரமேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
மேலும் அவர் இதுபோல் வேறு சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X