search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு பாட்டில்குத்து.
    X
    வாலிபருக்கு பாட்டில்குத்து.

    வாலிபருக்கு பாட்டில்குத்து

    தேவகோட்டையில் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பாட்டில்குத்து விழுந்தது.
    தேவகோட்டை

    மதுரை ஆனையூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தர்ஷன்(வயது 30). அதே பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் ஜீவா(27) மற்றும் சந்துரு ஆகிய 3பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வரு கிறார்கள்.

    இவர்கள் 3பேரும் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் பெயிண்டிங் பணிக்காக சென்றனர். அங்கு தங்கி  வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் தனியாக வீடுஎடுத்து தங்கினர்.

    காலையில் வழக்கம்போல் நண்பர்கள் 3பேரும் வேலைக்கு சென்றனர். அதன் பிறகு மாலையில் வீடு திரும்பிய அவர்கள் மது அருந்தினர். அப்போது  ஜீவாவுக்கும், தர்ஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த ஜீவா மது பாட்டிலால் தர்ஷனை குத்த முயன்றார். அதனை தடுத்தபோது தர்ஷனின் கையில் குத்து விழுந்தது. ரத்தகாயம் அடைந்த அவரை சந்துரு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஜீவா கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×