என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது

    சிதம்பரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் போலீஸ் சரகம் கீழ்ராதம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது இவர் அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பிரேம் குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×