search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    X
    புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் 2 புதிய கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சியாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முதன்மைக் கட்டிடத்தை ஒட்டி 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளும், குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளும் அடங்கிய இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தற்போது குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 வகுப்பறைகளும் 48 விடுதி அறைகளும் உள்ளன.

    அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் 6 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளும், 15 புதிய விடுதி அறைகளும் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சியாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முதன்மைக் கட்டிடத்தை ஒட்டி 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளும், குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளும் அடங்கிய இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
    Next Story
    ×