search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வேலகவுண்டம்பட்டி அருகே மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்

    வேலகவுண்டம்பட்டி அருகே புளிய மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு மணியகாரர் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி.இவரது மகன் யோகநாதன் (35), ஆயில் கடை வைத்து நடத்தி வருகிறார். 

    இவரும் அவரது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த செல்லம்மாள் (78), ராதாமணி (56), பழனிச்சாமி (58) ஆகியோர் ஒரு காரில் சித்தோடு பகுதியில் இருந்து மோகனூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    காரை சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள நாகியம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ் (23) என்பவர் ஓட்டி வந்தார். கார் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வலது புறமாக ஒரு வழிப்பதையில் வந்தது.

    அப்போது எதிரே தடை செய்யப்பட்ட ஒரு வழிப்பாதையில் அடையாளம் தெரியாத வந்த வாகனத்தின் அதிக ஒளியால் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. 

    இதில் காரில் இருந்த யோகநாதன், செல்லம்மாள், ராதாமணி, பழனிசாமி மற்றும் டிரைவர் தினேஷ் ஆகியோர் காயமடைந்தனர். இதைப்பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தனர் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×