என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.44-க்கு விற்பனை - டீசல் விலையும் உயர்வு
ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 75 காசுகள் அதிகரித்து ரூ.109.44 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் அதிகரித்து ரூ.99.54 காசுக்கு விற்பனை ஆனது.
ஈரோடு:
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது.
கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.69-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ. 98.78 காசுக்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது.
ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 75 காசுகள் அதிகரித்து ரூ.109.44 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் அதிகரித்து ரூ.99.54 காசுக்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






