என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மங்கலம்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

    மங்கலம்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    மங்கலம்பேட்டை:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார், மங்கலம் பேட்டையை அடுத்த கர்ணத்தம் கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 25 கிராம் கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்த உளுந்தூர்பேட்டை மெயின் ரோடு, மங்கலம்பேட்டையைச் சேர்ந்த அன்வர் அலி மகன் இம்ரான் (எ) முகமது அலி (வயது 22) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×