search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மா மரங்களில் பூ, பிஞ்சுகள் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
    X
    மா மரங்களில் பூ, பிஞ்சுகள் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

    விளைச்சல் குறைந்ததால் மா விவசாயிகள் கவலை

    தேனி மாவட்டத்தில் விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வருசநாடு:

    வருசநாடு பகுதியில் விளையக்கூடிய மாங்காய் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையில் தற்போது மா மரங்களில் பூ, பிஞ்சுகளின் உற்பத்தி மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

    இதனால் இந்த ஆண்டு மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில்,  மா மரங்களில் பூ, பிஞ்சுகள் உற்பத்தியான நேரத்தில் தேவையான அளவில் மழை பெய்யவில்லை. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

    இதேபோல கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது. இதுபோன்ற பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது மா மரங்களில் பூ, பிஞ்சுகளின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

    எனவே இந்த ஆண்டு மாங்காய் விலை குறையும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×