search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே பாலகிருஷ்ணன்
    X
    கே பாலகிருஷ்ணன்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தமிழ்நாடு மாநில மாநாடு கடந்த மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1-ந் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராஜன், ஏ.கே.பத்மநாபன், சுதா சுந்தரராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட 553 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

    மாநாட்டின் நிறைவு நாளான நேற்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 6 முதல் 10-ந் தேதி வரை கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23-வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக் குழுவிற்கு ப.சுந்தரராஜன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
    Next Story
    ×