என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே மகன் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தந்தை தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே மகன் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கராபரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (65). விவசாயி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ந்தேதி தனது 2வது மகன் அலெக்ஸ்பாண்டியன் என்பவரை சொத்து தகராறில் விறகு கட்டையால் அடித்து கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
கடந்த 7 மாதம் சிறையில் இருந்த அண்ணாமலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தன் மகனை கொலை செய்ததால், அண்ணாமலையுடன் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் பேசாமல் இருந்துள்ளனர். இதில் மனமுடைந்த அண்ணாமலை வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த அவரது மனைவி குப்பு கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (65). விவசாயி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ந்தேதி தனது 2வது மகன் அலெக்ஸ்பாண்டியன் என்பவரை சொத்து தகராறில் விறகு கட்டையால் அடித்து கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
கடந்த 7 மாதம் சிறையில் இருந்த அண்ணாமலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தன் மகனை கொலை செய்ததால், அண்ணாமலையுடன் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் பேசாமல் இருந்துள்ளனர். இதில் மனமுடைந்த அண்ணாமலை வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த அவரது மனைவி குப்பு கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






