என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதாகி நின்ற அரசு பஸ்
திட்டக்குடியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
அரசு பஸ்கள் நிலை குறித்து உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் கூறினர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இல்லாததால் பஸ்கள் அடிக்கடி நடுவழியில் பழுதடைந்து நின்றுவிடுகிறது.
இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
திட்டக்குடியில் இருந்து பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு புலிவலம், கீரனூர் வழியாக ஆவடி கூட்டு ரோடுவரை சென்றது. பெருமுளை பெட்ரோல் பங்க் அருகில் வளைவில் திடீரென நடுவழியில் பஸ் பழுதடைந்தது.
இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கினர். தொடர்ந்து அவ்வழியே வந்த வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. முறையாக பராமரிக்க வேண்டும். அரசு பஸ்கள் நிலை குறித்து உயர் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் நடுவழியில் பழுதாகி நின்று பயணிகள் அவதி அடையும் நிலை தொடருகிறது என அவர்கள் கூறினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இல்லாததால் பஸ்கள் அடிக்கடி நடுவழியில் பழுதடைந்து நின்றுவிடுகிறது.
இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
திட்டக்குடியில் இருந்து பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு புலிவலம், கீரனூர் வழியாக ஆவடி கூட்டு ரோடுவரை சென்றது. பெருமுளை பெட்ரோல் பங்க் அருகில் வளைவில் திடீரென நடுவழியில் பஸ் பழுதடைந்தது.
இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கினர். தொடர்ந்து அவ்வழியே வந்த வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. முறையாக பராமரிக்க வேண்டும். அரசு பஸ்கள் நிலை குறித்து உயர் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் நடுவழியில் பழுதாகி நின்று பயணிகள் அவதி அடையும் நிலை தொடருகிறது என அவர்கள் கூறினர்.
Next Story






