என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடுகள் தீயில் எரிந்து நாசம்
கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது- 4 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து நாசமானது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் வீரன். கூலி தொழிலாளி. இவரது கூரை வீட்டில் நேற்று திடீரென்று மின்கசிவு காரணமாக தீ பிடித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அக்கம்பக்கம் உள்ள கோவிந்தன், குபேந்திரன், பிரகலாதன் ஆகியோரது வீடுகளிலும் பற்றியது. அப்போது கியாஸ் சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
எனினும் 4 வீடுகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் வீரன். கூலி தொழிலாளி. இவரது கூரை வீட்டில் நேற்று திடீரென்று மின்கசிவு காரணமாக தீ பிடித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அக்கம்பக்கம் உள்ள கோவிந்தன், குபேந்திரன், பிரகலாதன் ஆகியோரது வீடுகளிலும் பற்றியது. அப்போது கியாஸ் சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
எனினும் 4 வீடுகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






