என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடமுழுக்கு நடைபெற்றது.
சொர்ண காளியம்மன் கோவில் குடமுழுக்கு
பொரவச்சேரியில் உள்ள சொர்ணகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த பொரவச்சேரியில் உள்ள சொர்ணகாளியம்மன் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
Next Story






