search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்ற காட்சி
    X
    கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்ற காட்சி

    கடலூரில் கடும் பனிப்பொழிவு- வாகன ஓட்டிகள் அவதி

    பங்குனி மாதம் தொடங்கி நான்காவது நாளில் பங்குனி உத்திரத் திருவிழாவான இன்று காலை முதலே கடும் பனிப்பொழிவு இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் அவ்வப் போது காலைப் பொழுதில் கடும் பனி மூட்டம் ஏற்படுகிறது. இந்த பனி மூட்டத்தால் சாலைகளில் கடும் பனி சூழ்ந்து சாலைகளில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மழை பொழிகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் தங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட வண்ணம் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். பங்குனி மாதம் தொடங்கி நான்காவது நாளில் பங்குனி உத்திரத் திருவிழாவான இன்று காலை முதலே கடும் பனிப்பொழிவு இருந்தது.

    இந்த கடும் பனிப்பொழிவால் மோட்டார் வாகனங்களில் செல்பவர்கள் கடும் குளிரில் நடுங்கியபடி மோட்டார் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, வான்பாக்கம், மேல் பட்டாம்பாக்கம், வெள்ளக்கரை பில்லாலிதொட்டி திருவந்திபுரம், நெல்லிகுப்பம், போன்று பெரிய கங்கனாங்குப்பம், நகர் பகுதியான கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், புதுப் பாளையம், மஞ்ச குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் அதிகமான கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.

    Next Story
    ×