search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவிபூதேவியருடன் பெருமாள் அருள்பாலித்தார்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவிபூதேவியருடன் பெருமாள் அருள்பாலித்தார்.

    அப்பால ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம்

    கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடியில் 108 திவ்ய தேசங்களில்
     8-வது தலமாக அப்பால ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
    இக்கோவிலில் பங்குனிஉத்திரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர நாளான இன்று காலை ஸ்ரீ தேவிபூதேவியருடன் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கோயிலில் வலம் வந்தார்.

    கோவிலை சுற்றி வந்த பின்னர் முன்புறம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரிய தேரில் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பித்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோவில் செயல் அலுவலர் சுதா மற்றும் அறங்காவலர்கள் பொதுமக்கள் இணைந்து கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×