என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குடியாத்தத்தில் கல்லூரி பேராசிரியை தற்கொலை

    குடியாத்தத்தில் கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் மங்களம் கிராமத்தை சேர்ந்த சாயிதா பேகம் (வயது 39).

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ஷான்பாஷா செய்யாறு கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தற்போது ஷான் பாஷா குடும்பத்துடன் குடியாத்தம் காட்பாடி ரோடு ஒருங்கிணைந்த கோர்ட்டு எதிரே உள்ள ராஜகோபால் நகரில் வசித்து வருகிறார்.

    சாயிதாபேகம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சாயிதா பேகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து அவரது கணவர் ஷான்பாஷா குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் சாயிதா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாயிதாபேகம் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×