என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான குழந்தை
பாட்டி கண் எதிரே கார் மோதி குழந்தை பலி
நாகை வடக்கு பொய்கைநல்லூரில் கார் மோதி குழந்தை பலியானது
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த மணிமாறன்&சிவகங்கா தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு சர்வின் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 19.10.22 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மணிமாறன் இறந்தார்.
இதனால் சிவகங்கா குழந்தையுடன் தனது தாய் வீடான வேளாங்கண்ணி மாத்தாங்காடு சக்தி விநாயகர்கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தார்
சம்பவத்தன்று சர்வின் தனது பாட்டி மகேஸ்வரிடம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சாலையை கடக்க ஓடியபோது அவ்வழியே சென்ற கார் சர்வின் மீது மோதியது.
இதில் குழந்தை படுகாயமடைந்தது. உடன் சர்வீனை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்து5 மாதங்களில் ஒன்றரை வயது மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






