என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு வழிபாடு
கோவிலில் சிறப்பு வழிபாடு
சிவகாசி அருகே உள்ள வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்றிச்சியில் பிரசித்தி பெற்ற வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு உலக நன்மைக்காகவும், குழந்தைவரம் வேண்டியும் சிறப்புயாக பூஜைகள் நடத்தப்பட்டன. சந்தனம், பால், திருநீறு உட்பட 21வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story






