என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    முன்விரோதத்தில் கழுத்தை நெரித்து வாலிபரை கொன்று வீசிய கும்பல்- சிக்கிய 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்

    வேப்பூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர் முன்விரோதத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி வேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17).

    சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த அபிசுந்தர் கடந்த வாரம் ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அபிசுந்தர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டு பேசியபோது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மறுமுனையில் பேசினார். அபிசுந்தரின் செல்போன் அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகே கிடந்தது என்று கூறினார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அபிசுந்தரின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அபிசுந்தர் அந்த கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இது குறித்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி அபிசுந்தரின் உடலை மீட்டனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அபிசுந்தரின் உடலில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர் என்று அவரது உறவினர்கள் கூறினர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்வரை அபிசுந்தரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வாலிபர் அபிசுந்தரின் மரணம் தொடர்பாக திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த 5 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அபிசுந்தரின் குடும்பத்துக்கும் அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா, அண்ணாதுரை ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் சம்பவத்தன்று தனியாக வந்த அபிசுந்தரை கழுத்தை நெரித்து சரமாரியாக முகத்தில் தாக்கி கொலை செய்து அவரை கிணற்றில் வீசியுள்ளனர். இதையடுத்து இளைய ராஜா, அண்ணாதுரை, பாண்டியன், மணிமேகலை, பெரியம்மான் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தந்த வாக்குமூலத்தில் மேற்கண்ட தகவல்களை கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×