என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    வீடு புகுந்து பணம், செல்போன் திருடிய வாலிபர் கைது

    ஈரோட்டில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு கொத்துக்காரர் வீதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (28). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்தார்.அதிகாலை இவரது வீட்டில் புகுந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் போன் ஆகிய வற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடினார். 

     இதை கவனித்த யோகே ஸ்வரன் உறவினர்களுடன் அந்த நபரை துரத்தி சென்றார். ஈரோடு பஸ் நிலையம் அருகே அந்த நபரை மடக்கி பிடித்தனர்.  பின்னர் யோகேஸ்வரன், அந்த நபரை டவுன் போலீசில் ஒப்படைத்தார். 

     போலீஸ் விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த ரவி என்ற மாட்டுரவி (வயது36) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர்.  

    மேலும் விசாரணையில் ரவி மீது திருச்சி, கரூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் வீடு களில் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

    பின்னர் ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×