என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
திருமருகல் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே திருப்புகலூர் ஊராட்சி நெய்குன்னம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை நடத்தினர்.
அதில் உள்ள மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருப்புகலூர் ஊராட்சி அண்ணாநகர் மெயின் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) என்பதும், காரைக்காலில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் நன்னிலத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






