என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருத்தணி அருகே 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசம்
Byமாலை மலர்11 March 2022 6:26 AM GMT (Updated: 11 March 2022 6:26 AM GMT)
திருத்தணி அருகே 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள வீரகநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் அதேபகுதி இஸ்லாம்நகர் சாலை பகுதியில் சுமார் 4 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
தற்போது கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. கரும்புகளை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லு ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த நிலையில் பக்கத்து கரும்பு தோட்டத்தில் வெட்டப்பட்ட கரும்புகளில் கழிவுகளை தீயிட்டு எரித்தனர். அப்போது காற்றில் வேகத்தில் பறந்து வந்த தீ ராமமூர்த்தியின் கரும்பு தோட்டத்தில் விழுந்தது.
இதில் தீ மளமளவென பரவி கரும்பு தோட்டம் முழுவதும் எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் சுமார் 2 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.2 ½ லட்சம் ஆகும்.
கரும்பு தோட்டத்தில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி அருகே உள்ள வீரகநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் அதேபகுதி இஸ்லாம்நகர் சாலை பகுதியில் சுமார் 4 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
தற்போது கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. கரும்புகளை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லு ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த நிலையில் பக்கத்து கரும்பு தோட்டத்தில் வெட்டப்பட்ட கரும்புகளில் கழிவுகளை தீயிட்டு எரித்தனர். அப்போது காற்றில் வேகத்தில் பறந்து வந்த தீ ராமமூர்த்தியின் கரும்பு தோட்டத்தில் விழுந்தது.
இதில் தீ மளமளவென பரவி கரும்பு தோட்டம் முழுவதும் எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் சுமார் 2 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.2 ½ லட்சம் ஆகும்.
கரும்பு தோட்டத்தில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X